மீண்டும் எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

keerthi
0

 



செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக பெடரல் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

 எனினும்   முதலில் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.

மேலும், நவம்பரில் எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்த நிலையில் நவம்பர் மாதம் 13ஆம் திகதி ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஜேர்மனிக்குள் நுழையும் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

அத்தோடு   சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஆஸ்திரியாவின் எல்லையில் ஜேர்மனி 2015 முதல் எல்லை சோதனைகளை மேற்கொண்டதோடு அக்டோபரில் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 9,200 அங்கீகரிக்கப்படாத உள்ளீடுகள் கண்டறியப்பட்டதாகவும் மேலும் 4,370 தடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top