காசா மீது மீண்டும் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்

keerthi
0

 


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

 அத்தோடு  கான் யூனிஸ் நகரில் நேற்றைய தினம் (2.12.2023) இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதலில் இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ள நிலையில், பலஸ்தீனத்தின் மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியதை பொருட்படுத்தாமல் தெற்கு காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

அத்தோடு   போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, காசாவில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எட்டு வாரப் போரினால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top