ரச்சிதாவை நினைத்து சோகத்தில் தினேஷ்... மீண்டும் சேர்வார்களா? கண்கலங்க வைக்கும் ப்ரொமோ

tubetamil
0

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத நிகழ்வுகளை கூறி கண்கலங்கி வருகின்றனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 74 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 70 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இதில் போட்டியாளர்கள் தங்களது சோகத்தை கூறி வரும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விக்னேஷ் ரச்சிதாவைக் குறித்தும் பேசியுள்ளார். இதனை வெளிப்படையாக பேசாமல் 6வது சீசன் குறித்து தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top