லாட்டரியில் ரூ.200 கோடி வென்ற முதியோர் தம்பதி... வாழ்க்கை சினிமா படமானது

keerthi
0


அமெரிக்கா, மெக்சிகோ யவார்டை சேர்ந்தவர் ஜெர்ரி (வயது 80). அவரது மனைவி மார்ஜ் செல்பி (81). தம்பதியினர் அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து 60 வயதில் ஓய்வு பெற்றனர்.

2003-ம் ஆண்டு, 'வின்ஃபால்' என்ற புதிய லாட்டரி சீட்டு விற்பனையை பார்த்த செல்பி, எப்படியும் ஜாக்பாட்டை அடிக்க விரும்பினார். சிறுவயதிலிருந்தே கணிதத்தில் சிறந்து விளங்கிய செல்பி, வெற்றி எண்ணை கணக்கிட்டு எப்படி பரிசு தொகை வழங்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார்.

இந்த கணக்கை கண்டுபிடித்த செல்பி முதன்முதலில், மொத்தம் 1,100 டாலர்களை வைத்து 1900 டாலர்களை வெல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அதன்படி முதல் முறையாக 3,600 டாலர்களுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 6,300 டாலர்கள் வென்றார். எனினும்    அதே எதிர்பார்ப்புகளுடன் மீண்டும் 8 ஆயிரம் டாலர்களுக்கு வாங்கி 16 ஆயிரம் டாலர்களை வென்றார்.

அத்தோடு     செல்பி அதோடு நிற்கவில்லை. 9 வருடத்தில் 26 மில்லியன் டாலர்கள் வென்று உள்ளார். அதாவது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.200 கோடி சம்பாதித்தார்.

மூதாட்டியின் புத்திசாலித்தனத்தால் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர்.

மேலும்     இந்த ஜோடியின் கதையை வைத்து 'ஜெர்ரி அண்ட் மார்ஜ் கோ லார்ஜ்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top