இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20
ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி எஞ்சின்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றவையா என ஆராயவே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ரயில் எஞ்சின்களை ஆய்வு செய்வதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த 05 பரிசோதகர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.