வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும்..!!

tubetamil
0

 அத்தியாவசியப் பொருட்களுக்கான


வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும்..முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்


புதுவருடம் தொடங்கி  புதுவருட அன்றே புதுவரவு மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பேரதிச்சியினை பேரலையும் ஏற்படுத்தியிருக்கின்றது..

கடந்த வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ப்பட்டுள்ளது..2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முதலாம்,இரண்டாம் வாசிப்பிலே சமர்ப்பிக்கப்பட்ட விடையத்தில் உண்மைகளை முடிமறைத்து 97 பொருட்களின் விலைவாசி உயர்த்தியிருக்கின்றது..

யாழ் ஊடக  அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதை தெரிவித்தார்..மேலும் தெரிவிக்கையில்

எதிர்கட்சிகள் பல பொருட்களின் பட்டியல்களை சமர்ப்பிக்க சொல்லியும் கேட்டு ஜனநாயக விரோத செயற்பாட்டில் ஒரு ஆராஜகமான செயற்பாட்டிலே சர்வதிகார செயற்பாட்டில் திருட்டுத்தனமான பாதீட்டினை செய்துயிருக்கின்றது

இவ்வருடத்திலே இலங்கைவாழ்மக்கள் மீது பெரும் வரிச்சுமையினை செலுத்தியுள்ளது

குறிப்பாக வரிக்குள்ளே மதுபானம்,புகைத்தல், ஆடம்பர,இலத்திரனியல் பொருட்களுக்காக பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டுயிருந்தாலும்

அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்வடை ந்திருப்பது பேரதிர்ச்சியினை பேரலையும் ஏற்படுத்தியிருக்கின்றது..

கடந்த 30வருடம் யுத்த நடந்தபோதிலும் கூட இப்படியான வரி அதிகரிக்கப்படவில்லை,விலைவாசியும் அதிகரிக்கப்படவில்லை? பொருட்தட்டுப்பாடு எற்படவில்லை 30 வருடயுத்தத்திலும் கூட பல்லாயிரம் ரூபாக்களை செலவளித்த இவ்வரசாங்கம் 30 வருட யுத்தம் முடிந்த பிற்பாடு 2024 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இவ்வளவு  வற்வரியிலான சுமையினை தாங்ககூடிய  மக்களாக  காணப்படுகின்றனர்.

எற்கனவே இருந்த அரசாங்கங்களும் ஊழலுக்கு,  மோசடிக்கு,துஸ்பிரயோகத்திற்கு பெயர்போன அரசாங்களுக்கு இருந்தது.மக்களால் விரட்டப்பட்ட அரசாங்கமாக காணப்பட்டது

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மக்கள் ஆதரவு பெறமால் நாடாளுமன்ற பெரும்பாண்மையினை பெற்றுக்கொண்டு வந்து ஜனநாயக விரோதபாதீட்டினை
நிறைவேற்றியுள்ளார் 

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கும், ஏழை,மக்களும்,அன்றாடம் கூலித்தொழினை செய்வர்கள்,வடக்கு,கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்,மலையக கூலித்தொழிலை செய்கின்ற மக்கள்,சிறுபாண்மையின மக்களது வயிற்றில் பேரடி இடியாக காணப்படுகின்றது

இவ் பாதீட்டினை சமர்ப்பித்து அது மக்களுக்கு எந்த பயனும் இல்லாது வாட்டிவதைக்கின்ற அரசாங்கமாகயுள்ளது

பாதீடு தொடர்பாக குரல்கொடுக்கின்றார்கள் 
நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய விடையங்களை பேசாமல் அதனை தடுத்து நிறுத்தவேண்டிய விடையங்களை தடுத்துநிறுத்தாமலும்  பாதீட்டில் எதிராக  வாக்களிக்கமாலும் இருந்துகொண்டு தற்போது வெளியில்வந்து மக்கள் மீது பாதீடு தொடர்பாக குரல் கொடுக்கின்றார்கள்.

நாணயநிதியம்,உலகவங்கி,ஆசிய,அபிவிருத்தி வங்கி,சர்வதேச நிதிவழங்குனர்கள்,ஆகியோர்களாக இருக்கலாம்..வரிச்சலுகையினை அதிகரித்து யிருக்கின்றோம்.என்ற விடையத்தில் மக்களை தள்ளிவிட்டுயிருக்கின்றோம்

அரசாங்கம் வரிசலுகை தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டும்.உடனடியாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும்..

இப்போது அத்தியாவசியபொருட்களில் வெங்காயம் 530  ரூபா விற்கின்றது.மேலும் அத்தியாவசியபொருட்களின் விலைகள் விண்ணைதொட்டுக்கொண்டுயிருக்கின்றது

உடனடியாக எற்றுக்கொள்ளமுடியாது திரைமறைவிலே திட்டமிட்டு கள்ளகபடமாக கொண்டுவந்த வரிச்சுமை யினை மக்கள்மீது சுமத்தப்பட்ட வரியினை நீக்கவேண்டும்

நீக்கதவறும் பட்சத்தில் இன்னுமொரு மக்கள் போராட்டம் தென்னிலங்கை மக்களும்,நாடு பூராக மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்.அது மக்கள் போராட்டமாக வெடிக்கும்..என்றார்..இதில் அனைத்து போது அமைப்புக்களும்,சமூகம் அமைப்புக்கள்,மக்கள்,மண்ணிணை நேசிக்கின்ற உறுவுகளும் ஒன்றினைந்து அரசாங்கத்தினை விரட்டவேண்டும்..

ஊழலுக்கு பெயர்போன அரசு இது? பிணைமுறி மோசடியில் சிக்குண்டு 1500 கோடி ரூபா விழுங்கிய அரசாங்கம் இது

ஆர்ஜுன மகேந்திரன், ரவிகர்ணநாயக்க,அவர்கள் பின்னனியில் இருக்கின்ற அரசாங்கம் ஆசியாவில் பெயர்போன மஹிந்தராஜபக்சவின் குடும்ப பின்னணியில் பெயர்போன ஊழல் ஆட்சியில் இன்னும் ஒரு ஊழலால் இவ்வாறு இடம்பெறுகின்றது என்றார்

பெறுமதிசேர்வரி 18 வீதமாக அதிகரிக்கப் பட்டிருக்கின்றது அதனை நிக்கி மக்களுக்கு சரியான நிவராணத்தினை வழங்கவேண்டும் என்றார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top