இலங்கையில் முதன்முறையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு..!!

tubetamil
0

 தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு, இன்று (06) இலங்கையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டியானது நடைபெற்றது. தமிழ்நாட்டின் ஜல்லிகட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு நூறுக்கும் அதிகமான மாடுகள் பங்கேற்றன.

சம்பூர் பகுதியில் இதற்கு முன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டிருந்தாலும் குறைவான எண்ணிக்கையில் மாடுகள் பங்கேற்கும் சிறிய போட்டிகளாகவே அவை இருந்தன. பிரமாண்ட முறையில் இலங்கையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது இதுவே முதன்முறை.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top