திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர்; அதிர்ந்து போன பயணிகள்…கடைசியில் நடந்தது என்ன..?

keerthi
0


அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 'டெல்டா' விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 757 ரக விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 184 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர்.

கட்டுப்பாட்டு அறை சிக்னலுக்கு விமானிகள் காத்திருந்தனர். அப்போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்தது. இதனால் அந்த விமானம் அதிர்ந்தது. விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளை விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top