கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது அதிர்ச்சி..!!

tubetamil
0

 வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர்.


வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மோட்டர் சைக்கிளில் ஏ9 வீதி ஊடாக பொல்காவலை நோக்கி பயணித்த குடும்பஸ்தரை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது, மோட்டர் சைக்கிள் இருக்கைப் பகுதிக்குள் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 375 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன், குறித்த குடும்பஸ்தரும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு புளியங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொல்காவலைப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும், கஞ்சாவையும் நீதிமன்றில் முற்படுத்த புளியங்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top