அந்த அரசாங்கம் அதன் தலைவர்களால் சிதைந்தது..!!

tubetamil
0

 6.9 மில்லியன் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைக்கப்பட்ட அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டது என்று


பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

"6.9 மில்லியன் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் எங்கள் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டதில் நான் ஏமாற்றமடைந்தேன்," என்று அவர் கூறினார்.

எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"சில தேர்தல்களின் திகதிகளை முடிவு செய்ய ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனினும், ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் திகதியை யாராலும் தீர்மானிக்க முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top