மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இந்தநிலையில் தொடருந்தை வழித்தடம் ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.