மக்கள் காணிகளில் இராணுவ விவசாயம்..!!

tubetamil
0

 யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் மாத்திரம் சில இடங்களில் இராணுவ முகாம்களை வைத்திருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.


சாணக்கியன், அங்கு இராணுவத்தினர் மக்களின் காணிகளில் இருந்துகொண்டு காணி சொந்தக் காரர்கள் பார்த்துக்கொண்டிருக்கவே விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (24) பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது சாணக்கியன் எம்.பி மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. இன்னும் இந்த மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் இராணுவ முகாம்களை வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டக்களப்பு குருக்கள்மடம் மைதானமானது பாடசாலைக்கு சொந்தமானது என்றாலும் இன்னும் இராணுவம் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றது. அதனை விடுவிக்க மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.

இதேவேளை வடக்கு, கிழக்கில் பலாலி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் அந்த மக்கள் வேலிகளுக்கு அந்தப்பக்கம் இருந்து பார்த்துக்கொண்டிருக்கையிலேயே இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். மக்கள் காணிகளையே இராணுவம் வைத்துள்ளது என்றார்.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top