தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்..!!

tubetamil
0

 ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்புரிமை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக


அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம், அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர், SJB தமது கட்சி உறுப்புரிமையை இடைநீக்கம் செய்து அவர்களை பாராளுமன்றத்தில் இருந்து நீக்கிய முடிவை ரத்து செய்யுமாறு கோரி அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததையடுத்து, இரண்டு அமைச்சர்களையும் கட்சியிலிருந்து நீக்க SJB இன் செயற்குழு தீர்மானித்தது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top