சட்டவிரோத சொத்துக்களுடன் பெண் கைது..!!

tubetamil
0 minute read
0

 சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைத்த  முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (21) அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியில், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன சந்தேக நபருடன் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பெண் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top