வட்டியில்லா கடன் வழங்க திட்டம்

keerthi
0

 


வட்டியில்லா கடனை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். 

தேயிலைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் உரப்பற்றாக்குறை காரணமாக தேயிலை அறுவடையில் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேயிலை நிதியில் இருந்து தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு தேயிலை அறுவடை 260 மில்லியன் கிலோகிராமாக காணப்பட்டது. 

இது கடந்த ஆண்டை விட சுமார் 40 மில்லியன் கிலோகிராம் குறைவாகும். உரிய முறையில் உரமிடுவதன் மூலம் அடுத்த 6 மாதங்களுக்குள் தேயிலை விளைச்சலை 90 மில்லியன் கிலோகிராமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top