பங்களாதேஷ் தொடருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் ஐவர் உயிரிழப்பு..!!

tubetamil
0

 பங்களாதேஷில் தொடருந்து ஒன்றில் நேற்று (05) ஏற்பட்ட தீப்பரவலில் 5 பேர் உயிரிழந்தனர்.


பொது தேர்தலை புறக்கணித்தமைக்காக எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது குறித்த தொடருந்து மீது தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நான்கு பெட்டிகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் ஏற்பட்ட தொடருந்தில் இந்திய பிரஜைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

காயமடைந்த பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top