திருகோணமலையில் ஆலய வழிபாட்டிற்கு தடை விதித்த பாதுகாப்பு படையினர்..!

keerthi
0


திருகோணமலை - தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

தென்னமரவடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமிமலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால் பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்றையதினம் (23) குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.

வெருகல், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்த 50இற்கு மேற்பட்ட பொது மக்கள் வருகை தந்தபோது அப்பகுதியில் 400இற்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் நுழையவிடாது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எனினும்       இதன்போது குறித்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, சமூக செயற்பாட்டாளர் நவரெத்தினராசா அஞ்சலி, ஆலய தலைவர் வைரமுத்து விஜயநாயகம் உட்பட அகம் அமைப்பின் அங்கத்தவர்கள், தமிழ் தேசிய மக்களும் என குறிப்பிட்டு புல்மோட்டை காவல்துறை பொறுப்பதிகாரியினால் தடையுத்தரவு வழங்கப்பட்டதுடன் ஏனைய பொதுமக்களும் தடுக்கப்பட்டனர்.

எனினும்      இதன்போது குறித்த இடம் பௌத்த விகாரைக்கு உரியது எனவும் இன்று நீதிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து பொதுமக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top