நுவரெலியாவில் வாகனம் மோதி இருவர் படுகாயம்..!

tubetamil
0

 நுவரெலியா   மாநகர சபையின் கழிவு அகற்றும் பௌசர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது, இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 கழிவகற்றும் வாகனம் இன்று காலை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உடபுஸல்லாவ வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த இருவர் மீது மோதியுள்ளது. 

இதன்போது, இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

அதேவேளை, இந்த வாகனம் பாதையில் பயணித்த இருவர் மீது மோதுவதற்கு முன் நுவரெலியா ஆவாஹெலியவை நோக்கி பயணித்த கார் ஒன்றுடனும் மோதியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 


இந்நிலையில், மாநகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகன சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top