நாட்டு மக்களுக்கு நீதி அமைச்சர் விசேட அறிவிப்பு..!

tubetamil
0 minute read
0

 நாட்டு மக்களுக்கு இன்றையதினம் ஒரு நற்செய்தியை வழங்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அமைச்சர் இன்று அறிப்பார் என எதிர்ப்பார்க்கப்படகிறது.


மேலும், அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதியினால் முக்கிய அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகின்ற நிலையில், விஜயதாச ராஜபக்சவின் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று அறிவித்துள்ளனர்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top