அடிக்கடி ஏமாறும் ராசியினர் இவர்கள் தான்.

tubetamil
0

 ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் தங்களின் அறிவை எவ்வாறு விரிவுப்படுத்திக்கொள்வது என்பது குறித்தும் எந்த இடத்தில் அறிவை பயன்படுத்தி செயற்பட வேண்டும் என்பது குறித்தும் தெரியாதவர்களாக இருப்பார்கள்.


எப்போதும் மற்றவர்களை முழுமையாக நம்பிவிடுவதன் காரணமாக அவர்கள் மோசடிக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இப்படி முட்டாள் தனமாக செயற்படுவதன் மூலம் வாழ்வில் அடிக்கடி மோசமாக ஏமாறும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே நம்பிக்கை மற்றும் உறுதியான மனநிலைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் லட்சிய வாதிகளாக இருக்கின்ற போதிலும் மற்றவர்கள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருப்பதன் காரணமாகவும் அவசர முடிவுகளை எடுப்பதன் காரணமாகவும் அடிக்கடி ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். 

ஒரு விடயத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் நல்ல பக்கத்தையும் தீய பக்கததையும் அறிந்து செயற்படும் தன்மை இவர்களிடம் இல்லாமையே ஏமாற்றத்துக்கு காரணமாக அமைகின்றது. 



மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களுடன் இணைந்து செயற்படுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதே சமயம் மற்றவர்கள் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பார்கள் இதுவே பல சமயங்களில் இவர்களின் ஏமாற்றத்துக்கு காரணமாகிவிடும். அடிக்கடி முட்டாள்தனமான முடிவுகளை சற்றும் சிந்திக்காமல் எடுத்துவிடுவார்கள். 

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் முறன்படுவதை ஒருபோதும் விரும்புவது கிடையாது.

இவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வாழ்வில் சில முடிவுகளை முட்டாள் தனமாக எடுக்கும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்வில் பல தடவை ஏமாற்றத்தை சந்திக்க வேண்டி ஏற்படும். 

தனுசு ராசியில் பிறந்தவர்கள்  திறந்த மனப்பான்மை உள்ளவர்கள் இருப்பார்கள். அதனால் மற்றவர்கள் இவர்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றது.

மேலும் இவர்களுக்கு மற்றவர்களின்  வார்த்தைகளை முழுமையாக நம்பும் குணம் இருப்பதால் வாழ்வில் அடிக்கடி ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். 

மீன ராசியில் பிறந்தவர்கள் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுதந்திரமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பெரும்பாலலும் அதிக நேரத்தை கற்பனை செய்வதில் கழிக்கும் இவர்களை மற்றவர்கள் தங்களின் தேவைக்காக பயன்னடுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.அதனால் இவர்கள் வாழ்வில் பல முறை ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top