யாழ் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்.

tubetamil
0

 இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்கக்கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது.

இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுவதோடு இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியாவில் போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும்.

குறித்த சிகிச்சை நிலையம் இரண்டு விசேட படுக்கை அறைகளை கொண்டுள்ளது. ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார அமைச்சர்  ரமேஸ் பத்திரனவால் வைபவ ரீதியாக எதிர்வரும் வாரம் திறந்து வைக்கப்படவுள்ளது.











Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top