முறையான விசா ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்படுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸார் இன்று இவர்களை கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க ஆண்டியம்பலம பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.