ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு..!

tubetamil
0

 நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நுவரெலியா  - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினர் முன்னிலையாகாத நிலையில் குறித்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


குறித்த தொழிற்சாலைக்குள் அத்துமீறி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் உள் நுழைந்ததாக தெரிவித்து களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினரால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட குழுவினர் முன்னிலையாகவில்லை. 

இந்தநிலையில், வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத அமைச்சர்  ஜீவன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top