ஹபராதுவ துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம்..!

tubetamil
0

 காலி, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு இரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களுக்கு இடையிலான தகராறின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் நேற்று இரவு மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த (பொடி சுத்தா) 34 வயதுடைய ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே காயமடைந்துள்ளனர்.

இதன்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொடி சுத்தா என்ற நபர் ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதுடன், போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி விட்டு வெளியேறியவர் என கூறப்படும் பொடி சுத்தா அப்பகுதியில் வசிக்கும் குண்டர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஆயுததாரிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top