அரசாங்கத்தின் நோக்கத்தை கூறிய ஹரினி..!

tubetamil
0

அரச சேவையை அரசாங்கம் ஒருபோதும் அற்பமானதாகக் கருதுவதில்லை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் மீதான மக்களின் நம்பிக்கை, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலக ஊழியர்களிடையே உரையாற்றிய அவர், பொதுச் சேவைகள், அரச பொறிமுறைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான பொது நம்பிக்கையே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது.

அது நம் நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மற்றும் பொது சேவைகள் மீது மக்களுக்கு எதிர்மறையான அணுகுமுறை உள்ளது. இந்நிலையில், குறித்த சேவைகள் பயனற்றவை என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top