இலங்கையில் உள்ள கண்டி - அணிவத்த பகுதியில் உள்ள உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக்க தெரிய வந்துள்ளது.
கண்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இதேவேளை , பல்லேகலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் உட்பட 130 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ராஜகிரிய – வெலிக்கடை பகுதியில், இணையத்தள நிதி மோசடியில் ஈடுபட்ட 15 சீன பிரஜைகள் நேற்று கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.