திவுலபிட்டிய படல்கம - நீர்கொழும்பு வீதியிலுள்ள தொழில்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கார்பன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக முற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்தந்ததாக போலீசாரை மேகொண்ட முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.