நடிகர் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா டகுபட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1 பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது பாகுபலி 3 தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த வந்த RRR படமும் அதே போல பெரிய வெற்றியைப் பெற்றது அதில் நடித்த ராம் சரண், ஜூனியர் என்டிஆர் பான் இந்தியா பிரபலமாகினார். 'பாகுபலி 2 படம் வெளிவந்த பின்பே 'பாகுபலி 3 பற்றிய பேச்சுக்களும் எழுந்தது.
எனினும் 'பாகுபலி 1 படத்தை தமிழகத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி தயாரிப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் 'பாகுபலி 3' பற்றி திட்டமிட்டு வருவதாகவும்
தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். அந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட்ட பின்பு 'பாகுபலி 3' பட வேலைகளில் இறங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.