3000 ரூபா கொடுப்பனவை வழங்குங்கள் - அரச வங்கியின் ஓய்வூதியர் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை

tubetamil
0

 அரச வங்கி ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரச வங்கியின் ஓய்வூதியர் அமைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் தலைவர்கலே இவ்வாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


கடந்த ஜனாதிபதி தேர்தலின் காரணமாக 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் (ஒக்டோபர்) முதல்  கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.


இதேவேளை, அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் நேற்று முன் தினம் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை இன்று (18 ஆம்) திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான 2,021 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top