தமிழ் சினிமாவில் முதல் முறையாக முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கான்குவா திரைப்படம் வட இந்தியாவில் 3,500 திரையரங்கங்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடைசியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் திரையில் வெளிவந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து கங்குவா படம் வெளியாகிறது.
இதனால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளதுடன்
இந்த படத்தை சிறுத்தை படத்தை இயக்கியுள்ள சிவா இயக்கியுள்ளார். மேலும் வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் 3500 திரையரங்கங்களில் றிலீஸ் செய்வது என்பது தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகிய படங்கள் வட இந்தியாவில் 3,500 திரையரங்கிற்கும் மேல் ரிலீஸாகியுள்ளது. ஆனால், தமிழில் அந்த சாதனை முதலில் கங்குவா திரைப்படம் தான் செய்யப்போகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.