மகளை AI தொழில்நுட்பம் மூலம் தேடும் குடும்பம்...!

tubetamil
0

சுனாமியினால் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஒன்றை குடும்பம் ஒன்று மேற்கொண்டுள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றே குறித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேறி வருகின்றனர்.


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் 6 வயதான ஹிருணி தருஷிகா என்ற சிறுமி, ஹிக்கடுவவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது ராஜில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த குறித்த குடும்பத்தின் மகள் காணாமல் போயிருந்தார். 

அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது இவரின் வடிவமாக கருதப்படும் AIதொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதுடன் மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0711856162 அல்லது 0112515961 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, அவரது தாயார் மற்றும் சகோதரி கேட்டுக்கொண்டுள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top