அனுரவை இரண்டாவது கோட்டபாயவாக்க சூழ்ச்சி..!

tubetamil
0

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவை இரண்டாவது கோட்டபாய ராஜபக்ஷவை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகலே இவாறு முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ள அவர் , தமது கட்சி அந்த கருத்துக்கு இடமளிக்காமல், நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ள அனுமதிக்காது எனவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி அமைக்கும் வகையில்  தமது கட்சி இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளின் உதவி இன்றி தனியாக தீர்மானம் எடுக்கக் கூடிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டும் என விமால் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top