ஈரானிலுள்ள அணு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடாது என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் மிர் புடின் கடும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
அக்டோபர் 1ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என அச்சம் நிலவுகின்ற வேளையிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மும்முரம் அடைந்துவரும் நிலையில், ஈரான் அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கக்கூடும் என்ற கருத்து உருவாகியுள்ளதால், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முன் அதன் அணு மையங்களைத் தாக்கி அழித்துவிடவேண்டும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்இஸ்ரேல் ஈரானிலுள்ள அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்துமானால், அதனால் ஏற்படும் தொடர் விளைவுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவும் அவ எச்சரித்துள்ளார்.