இந்தியாவில் உள்ள ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் நவராத்திரி விழா சிறப்பாக இதன்போது சிறைக்கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் இடம்பெற்றது. இதனை சரியான வாய்ப்பாக கருதிய அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர்.
எனினும் வெளியில் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவனும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவருமே இவ்வாறு சிறையிலிருந்து வெளியேற நீண்டநாட்களாக திட்டம் தீட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவி கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ள்ளனர் .
குறித்த இதே வேளை அவர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.