மீன்பிடிக்க சென்ற பெண்ணை இழுத்து சென்ற முதலை!

tubetamil
0

 அம்பாறையில் மீன்பிடிக்க சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்து சென்ற சம்பவம் ஒன்று  நேற்று (14)  மாலை பதிவாகியுள்ளது.



அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான புட்டியாறு பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே  முதலை இவ்வாறு  இழுத்துச் சென்றுள்ளது. எனினும் அந்தப்பெண்ணை இதுவரை மீட்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த இதேவேளை காரைதீவு  – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்  இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.


இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் பிரதேச சபைகள், சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top