மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடை பேரணி..!

tubetamil
0

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடை பேரணி ஒன்று இன்று இடம் பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான குறித்த விழிப்புணர்வு நடைபேரணி தருமபுரம் வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கண்டாளைப் பிரதேசசெயலகம் வரை நடைபெற்றது. 


அங்கு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு  நடைபெற்றது. பிராந்திய தொற்றுநோய் வைத்தியர் க.றஞ்சன்,  கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்கள் இராணுவத்தினர் பொலிசார் ,தாதியர்கள், கண்டாவளை பிரதே செயலக உத்தியோகத்தர்கள்   வலய கல்வி பணிப்பாளர், கண்டாளை பாடசாலை மாணவர்கள்,கிராம சேவையாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top