டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி(வற்) ஏய்ப்புச் சம்பவம் தொடர்பில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.