கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை அறிவிப்பு..!

tubetamil
0

 நாட்டில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் 2023 ஓகஸ்டில் 90.2 ஆக இருந்த கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் , இந்த ஆண்டு ஓகஸ்டில் 91.3 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

எனினும்  இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான உற்பத்திகளில் வீழ்ச்சி காணப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு சற்று குறைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் 16,373 ரூபாவாக இருந்த வறுமைக் கோடு ஓகஸ்ட் மாதத்தில் 16,152 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 2023 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பாகும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top