கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் சேவை பாதிப்பு

tubetamil
0

 


கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக அந்த பிரதேசத்துக்கான  ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 



இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான ரயிலின் இயந்திரமே  இவ்வாறு தடம் புரண்டுள்ளது.


அதனடிப்படையில், பிரதான மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கத்தின் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top