ஜனாதிபதியை சந்தித்த முக்கிய பிரதிநிதிகள்..!

tubetamil
0

 இலங்கை ஜனாதிபதியை இரண்டு தூதுவர்கள், மூன்று உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஆறு நாடுகளின் பிரதிநிதிகைகள் சந்தித்துத்துள்ளனர்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,


இலங்கை மற்றும் குறித்த ஆறு நாடுகளுக்கான  இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய கூட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவது என்ற தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்கவே குறித்த சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அத்துடன் சவூதி அரேபியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, பலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பிரதிநிதிகள் பல்வேறு துறைகளில் இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.



இதில் இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani) துருக்கி குடியரசின் தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட்( Semih Lütfü Turgut) பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி(Faheem Ul Aziz HI (M),இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ்(Andalib Elias) மற்றும் தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நான்கு நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரல் மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர்(Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) ஆகியோரே இவ்வாறு சந்திப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top