தொடருந்தில் மோதியதால் தாய் மற்றும் மகன் பலி

tubetamil
0

  தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (11)  திருகோணமலை - சீனக்குடா பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 


சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



 


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு தொடருந்து பாதையை கடக்கும் போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.


அத்துடன் கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் இவர்கள் இருவரும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top