ரயில் இயந்திரத்தில் தீ விபத்து - பயணிகள் அவதி!

tubetamil
0

களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டதால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், குறித்த ரயிலில் இருந்த பயணிகள் மற்றுமொரு ரயில் மூலம் மருதானைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் சிறிது ரயில் தாமதம் ஏற்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top