போலி பூச்சிகொல்லி மருந்துகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

tubetamil
0

 இலங்கையில்  போலியாக தயாரிக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பூச்சிக்கொல்லி மருந்துப் பதிவாளர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் மேலும் தெரிவிக்கையில்,

 பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற போர்வையில் போலியான பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உள்ளூர் போலி பூச்சிக்கொல்லிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அத்துடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உள்ளூர் போலி பூச்சிக்கொல்லிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலியான பூச்சிக்கொல்லி தம்புத்தேகமவில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

உள்ளூர் பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தைப் போன்றே இந்தப் போலி பூச்சிக்கொல்லியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கத்தரிக்காய் செய்கையின் போது பூச்சிகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தடுக்கப் பயன்படுத்தப்பட்ட 153 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து கைப்பற்றப்பட்டதாக பூச்சிக்கொல்லி மருந்துப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் போலி பூச்சிக்கொல்லி மருந்து கொள்கலன்களின் லேபிள், வெளிப்புற உறை மற்றும் பேக்கேஜிங் ஆகியவை பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியைப் போலவே தோற்றமளிதுள்ளதாகவும் போலி பூச்சி கொல்லி வகைகள் கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதனால் உடை உரிமையாளர்கள் அவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top