நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் புதிதாக திருமணம் செய்துக்கொள்ளவுள்ள தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன், திருமண காருக்கு பதிலாக, அவர்கள் தோணியை பயன்படுத்தியுள்ளனர்.
குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் , மணமக்களை சிலர் கேலி செய்து வரும் நிலையில் , எந்த ஒரு சூழ்நிலையும் தாங்கும், துணிச்சல் மிக்க பொருத்தமான ஜோடி என கூறி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.