இளம் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்!

tubetamil
0

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.



மேலும், முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் ஹேசா விதானகே ஆகியோரும் எதிர்வரும் பெர்துத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இந்த மூன்று அமைச்சர்களுக்கும் நெருக்கமான தரப்புக்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மூவரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top