இலங்கையின் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் வேட்பாளர்களாக , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஐக்கிய ஜனநாயகக் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சி கொழும்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்தக் கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கவுள்லதாவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.