மன்னார் (Mannar) - யாழ்ப்பாணம் (Jaffna) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலத்தினூடாக பயணிக்கும் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
அத்துடன் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இறக்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக பாலத்தில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.