யாழில் பல இலட்சம் பணம் தீயிட்டு எரிப்பு..!

tubetamil
0

 யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்தம்மை தொடர்பில் சந்தேக அடிப்படையில் நபர் ஒருவரை வட்டுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலமேலும் தெரிய வருவதாவது, 

“அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.


இன்னிலையில் அந்த வீதியால்  சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது

42 வயதுடைய 3  பிள்ளைகளின் தந்தையான ஒருவரே குறித்த செயலினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சம்பவம் தொடர்பில்  சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top