காலியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்க்க சென்ற இளைஞன் ஒருவர் எல்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வைஹேன, மட்டக்க பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்லாமை குறிப்பிடத்தக்கது.
இந்த இளைஞன் எல்பிட்டிய பொது விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.