கடந்த செப்டம்பர் 5ம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான விஜய்யின் கோட் திரைப்படம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க அதன் வெற்றியால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
தற்போது அப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து முடிந்துள்ள நிலையில் ரஜினி சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை பார்த்துள்ளார்.
பின் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு போன் செய்து கோட் படத்தை பார்த்தவதாகவும், நன்றாக இருப்பதாக வாழ்த்தியும் உள்ளார்.
மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?
இந்த சந்தோஷ செய்தியை வெங்கட் பிரபு தனது டுவிட்டரில் பதிவிட்டு தேங்யூ தலைவா என சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.